ரோம், மே 6- இத்தாலிய விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பிற்கான ஒரு மருந்தை கண்டறிந்துள்ளனர். இந்த மருந்து மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கும் எனக் கூறப்படுகிறது.
கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி யில் இத்தாலியின் ரோம் நகரில் செயல்பட்டு வரும் தொற்று நோய் ஸ்பா லன்சானி மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தடுப்பு மருந்து ஒன்றைக் கண்ட றிந்துள்ளதாக அந்த மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி லூய்கி அவுரிசிச்சியோ தெரிவித்துள்ளார். எலிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும், இது மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கும் திறன் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் நிறைவடைவதற்குள் இந்த மருந்து மனிதர்களுக்கு அளிக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி, டி.என்.ஏ,புரதம் மரபணு பொருளை அடிப்படை யாகக் கொண்டது. இது ஸ்பைக் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்பைக், புரதத்திற்கு எதிராக, குறிப்பாக நுரையீரல் உயிரணுக்களில், கொரோனா வைரசுக்கு கடும்பாதிப்பை ஏற்படுத்தி ஆன்டிபாடிகளை உரு வாக்கும். தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஸ்பைக்கில் எலக்ட்ரோபோரேஷன் எனப்படும் ஒரு நுட்பம் பயன்படுத்துகிறது. இவை உயிரணுக்களுக்குள் நுழைந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த உதவுகின்றன.